நிலவின் ஈர்ப்பு விசையை மாற்றியமைக்கும் மர்மமான மிகப்பெரிய பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பெய்லர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், நிலவின் தென் துருவத்தில் (அட்கென் பேசின்) பெரிய பள்ளத்தில் மறைந்திருந்த ஒரு மர்மமான மிகப்பெரிய பொருளை கண்டுபிடித்துள்ளனர். விண்ணில் சுற்றி வரும் எரிக்கல், நிலவின் மீது மோதியதால், அந்த எரிக்கல், உலோகமாக மாறி இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். இது நிலவின் ஈர்ப்பு விசையை மாற்றியமைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பெய்லர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் பீட்டர் பி ஜேம்ஸ் கூறுகையில், "நிலவின் தென் துருவத்தில், இந்த மர்ம பொருள், ஹவாய் பெருந்தீயை விட ஐந்து மடங்கு பெரிய அளவில் இருந்தது. நிலப்பரப்பில் புதைத்து வைத்தது போன்று ஒரு பெரிய பள்ளம் காணப்பட்டது. இது தோராயமாக நாங்கள் கண்டறிந்த அளவு. மேலும், இந்த பள்ளம் நீள்வட்ட வடிவத்தில், சுமார் 2,000 கிமீ தூரத்திலும், பல மைல்கள் ஆழம் கொண்டதாய் இருக்கலாம். இவ்வளவு பெரிய பள்ளம் நிலவின் தென் துருவத்தில் இருப்பதை, பூமியில் இருந்து நாம் காண முடியாது" என்று கூறினார்.